கயிறு வேலை செய்யுதே... ரோகிணி ஹேப்பி...கதறி அழுத விஜயா!

 
1

சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கையில் கட்டிய கயிறை விஜயா அவிழ்க்க சொல்ல, என் அப்பா நல்லா இருக்க வேணாமா? என்கிறான் முத்து. அண்ணாமலையும் எதுக்காக இப்படி பதற, என்ன விஷயம் என கேட்கிறார். விஜயா என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல், இது மனோஜுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கணும் சொல்லி வாங்குனது என்கிறாள். இதனையடுத்து உடனே முத்து அவர் கையில் இருந்து கழட்டுகிறான். இனி உங்களுக்கு நாலாவதா பையன் வேணாம் என சொல்கிறான்.

அதனை தொடர்ந்து மீனாவிடம், அம்மா சொன்னது பொய்யுன்னு தோணுது. ஏன்னா ரோகிணி கூட மனோஜை பேசவே கூடாதுன்னு சொல்றாங்க. இதுல எப்படி குழந்தை சீக்கிரம் பிறக்கனும் சொல்லி கயிறு வாங்கிட்டு வருவாங்க என கேட்கிறான். மீனாவும் ஆமாங்க என சொல்கிறாள். இதனையடுத்து முருகன் தான் வாங்க போகும் வீட்டை முத்துவை அழைத்து வந்து காட்டுகிறான்.


அவனும் வீட்டை பார்த்து சூப்பரா இருக்குடா. அட்வான்ஸ் கொடுக்க பணம் வைச்சு இருக்கியா என கேட்கிறான். லோன் போட்டு இருக்கேன்னா என சொல்கிறான். மற்றொரு பக்கம் வித்யாவும், மீனாவும் அங்கு வருகின்றனர். அதனை தொடர்ந்து தங்கள் காதலுக்கு உதவி செய்தவர்கள் என முத்துவை முருகனும், மீனாவை வித்யாவை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இருவரும் பார்த்து ஷாக் ஆகின்றனர். இந்த பொண்ணையா கல்யாணம் பண்ண போற. அவ்வளவு தான் உன் வாழ்க்கை முடிஞ்சது என்கிறான் முத்து.

உடனே மீனா இவர் மட்டும் நல்லவரா, என் பின்னாடி சுத்து என்னை பொண்ணு கேட்டு வந்தாரு வித்யா. நான் கூட ஒரு தடவை சொன்னேன்ல. என் பின்னாடி ஒரு ஆள் சுத்துறாருன்னு. அவர் இவர்தான் என சொல்கிறாள். அதற்கு முத்து அப்படியெல்லாம் கிடையாது. முருகன் நல்லவன் என்கிறான். மீனாவும் அதே மாதிரி வித்யாவும் நல்லவங்கதான் என சொல்கிறாள். இதனையடுத்து ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க என முத்து, மீனா வாழ்த்துகின்றனர்.

இதனையடுத்து மனோஜ் வீட்டுக்கு வந்ததும், உனக்காக் சாமியார் கிட்ட இந்த கயிறு வாங்கிட்டு வந்துருக்கேன் என சொல்லி கட்டி விடுகிறாள் விஜயா. ரோகிணியும் வந்து உன் தொழில் நல்லபடியா நடக்கனும் சாமியார்ட்ட வேண்டி வாங்கிட்டு வந்து இருக்கேன் என சொல்லி மற்றொரு கையில் ஒரு கயிறை கட்டி விடுகிறாள். அதன்பின்னர் மறுநாள் மனோஜ் ரோகிணி ஆஃப் பண்ணாமல் வைத்திருக்கும் அயர்ன் பாக்ஸ் மேல் கை வைத்து விடுகிறான். இதனால் கை சுட்டு விட, அவளை திட்ட ஆரம்பிக்கிறான்.
 

ரோகிணியும் பதிலுக்கு பேச, ரெண்டு பேரும் சண்டை போடுகின்றனர். விஜயா அதை பார்த்து கயிறு வேலை செய்யுது என நினைத்து ரூமுக்குள் போய் ரோகிணியை திட்ட ஆரம்பிக்கிறாள். அப்போது மனோஜ் நீ எதுக்கும்மா இப்ப வந்த? அதான் நான் பேசிட்டு இருக்கேன்ல. மொத வெளிய போம்மா என சொல்கிறான். இதனைக்கேட்டு விஜயா அதிர்ச்சியாக, நம்ம கயிறு வேலை செய்யுதே என ரோகிணி ஹேப்பி ஆகிறாள்.


விஜயா ஹாலுக்கு வந்து அழுது கொண்டிருக்க முத்து அப்பாவை அழைத்து வருகிறான். அண்ணாமலையும் வந்து எதுக்கு அழுகிற என கேட்க ரவியும், ஸ்ருதியும் அங்கு வருகின்றனர். எதுக்காக அழுகிறாள் என அனைவரும் கேட்க, மனோஜ் என்னை வெளிய போக சொல்லிட்டான் என்கிறாள் விஜயா. அதனைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.

From Around the web