நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக பரவும் செய்தியில் உண்மை இல்லை: பெங்களூரு போலீசார் விளக்கம்..!!

 
1

பெங்களூரு விமான நிலையத்தில் அடையாளம் தெரியதாக நபரால் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை அவரின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் கூறியுள்ள போலீசார் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றார். நேற்று நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி சென்று கொண்டிருந்த போது அவரை ஒருவர் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் உதவியாளர்கள் மற்றும் காவலர்களுடன் விஜய் சேதுபது நடந்து சென்று கொண்டிருக்க திடீரென அங்கு வரும் ஒருவர் ஏறி காலால் உதைப்பது போல் அந்த வீடியோ உள்ளது. ஆனால், விஜய்சேதுபதி மீது அடி விழுந்ததா என தெரியவில்லை. ஆனால், அப்போது விஜய்சேதுபதி நிலைகுலைந்து போனார்.

காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜய்சேதுபதியின் உதவியாளர் தான் தாக்கப்பட்டுள்ளார் என தற்போது  தெரியவந்துள்ளது.

From Around the web