சூர்யா ரசிகர்களை கண்டு அஞ்சும் பாண்டிராஜ்- காரணம் இதுதான்..!

 
பாண்டிராஜ்

நடிகர் சூர்யாவை வைத்து அவருடைய 40-வது படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், சூர்யாவின் ரசிகர்களை கண்டு பயம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் மற்றும் திவ்யா துரைசாமி என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, வினய், சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போது ட்விட்டர் ஸ்பேஸில் அவர் கலந்துகொண்டர். அவருடன் இயக்குநர் பாண்டியராஜும் இணைந்துகொண்டார்.

அப்போது ரசிகர்கள் சிலர் அவரிடம் சூர்யா 40 குறித்து அப்டேட் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இப்போது படத்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது. படத்தின் டைட்டில் முதல் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்பதால், அவர்களுக்கு பயந்துகொண்டு சமூகவலைதளங்கள் பக்கம் வர இயலவில்லை என்று அவர் கூறினார்.
 

From Around the web