இதனால் தான் கமல்ஹாசனுடன் நடிக்க முடியவில்லை: ராகவா லாரன்ஸ் விளக்கம்..!

 
இதனால் தான் கமல்ஹாசனுடன் நடிக்க முடியவில்லை: ராகவா லாரன்ஸ் விளக்கம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கவிருந்த வாய்ப்பை தவறவிட்டதற்கான காரணத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்துவிட்டது. இதனால் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள விக்ரம் படத்திற்கான ஷூட்டிங் பணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறார் கமல். இதுதொடர்பான தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இந்த படத்தில் வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஃபகத் பாசில், பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் என பலரிடம் இதற்கான  பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டு இருந்தது.

நடிகர் ராகவா லாரன்ஸை விக்ரம் படத்திற்காக இறுதிசெய்யும் படக்குழு முனைப்பு காட்டி வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்கனவே பரிசீலனை செய்யப்பட்ட நடிகர் ஃபகத் பாசிலை வில்லனாக படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ராகவால் லாரன்ஸ் விக்ரம் படத்தில் இருந்து வெளியேறியுள்ளது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருவதால் கமலின் விக்ரம் படித்தில் நடிக்க முடியவில்லை. மேலும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கப்படவுள்ளன. அதனால் கமலுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

From Around the web