அக்டோபரில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடக்கம்..!!

 
1

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தவிர்த்து ‘ஜெய்பீம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் பணிகளுக்கு இடையே ‘வாடிவாசல்’ படத்தின் முதற்கட்டப் பணிகளையும் கவனித்து வருகிறார்.

அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குவதற்காகப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இந்தப் படத்தை உருவாக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web