விஜய் ஆண்டனி மகள் மீராவின் தற்கொலை கடிதம் சிக்கியது..! 

 
1

நேற்று அதிகாலை விஜய் ஆண்டனியின் மகள் மீரா தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது அனைவருக்குமே மிக பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது…16 வயதே ஆகும் மீராவின் இந்த விபரீத முடிவு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது…மீராவின் மறைவால் நடிகர் விஜய் ஆண்டனியும் அவரது குடும்பத்தினரும் மனமுடைந்து உள்ளனர்.

அவர்களுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களுடைய இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மகளின் உடலை கண்ணீருடன் சுமந்து வந்த விஜய் ஆண்டனி ஆம்புலன்ஸில் வைத்த காண்போரை மிகவும் கண்கலங்க செய்தது. இதையடுத்து சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு மீராவின் உடலை கொண்டு வந்தனர்.அங்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக மீராவின் உடல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மீராவின் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது…அதில் அவர் எழுதியுள்ளது நான் எனது நண்பர்களையும் ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன்,நான் இல்லாமல் என் குடும்பம் மிகவும் தவிக்கும்,Love you all,மிஸ் யு all என எழுதியுள்ளதாக தகவல் வந்துள்ளது…

From Around the web