33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மௌனப் படத்தில் விஜய் சேதுபதி!

 
1

விஜய்சேதுபதி காந்தி டாக்ஸ் என்ற மௌன படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது பட வேலைகள் தீவிரமாகி உள்ளன. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான புஷ்பக விமானா படமே கடைசியாக வந்த மௌன படமாகும். இந்த படத்தை தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியிட்டனர்.

33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காந்தி டாக்ஸ் மவுன படம் உருவாகிறது. இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க அதிதிராவிடம் பேசி வருகிறார்கள்.

விஜய்சேதுபதி ஏற்கனவே மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆக தயாராகும் மும்பைக்கார் படத்தில் நடித்து வருகிறார். ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகும் இந்தி வெப் தொடரிலும் நடிக்க உள்ளார்.

From Around the web