விஜய் ஆண்டனியுடன் மோதும் விஜய் சேதுபதி..!!

விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களுக்கு முன்பு தாயராகிவிட்ட ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம், விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படம் வெளியாகும் அதேநாளில் வெளிவரவுள்ளது.
 
 
vijay sethupathi

வெங்கட கிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் உருவான படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. இந்த படத்துக்கான தயாரிப்புப் பணிகள் அனைத்தும் 2021-ம் ஆண்டு முடிவடைந்து, 2022-ம் ஆண்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து முடிந்தன.

ஆனால் விநியோகப் பிரச்னை காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அவர்களுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ் திருமேனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் மே 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநாளில் விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2 படம் வெளியாகிறது. ஏற்கனவே பிச்சைக்காரன் முதல் பாகம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. 

இப்போது அதனுடைய இரண்டாவது பாகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி, அதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்துடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் படம் போட்டியிடுவது சரியாக இருக்குமா என்கிற கேள்வி தமிழ் திரையுலகில் எழுந்துள்ளது.

From Around the web