ஒரேடியாக ரோகிணியை வீட்டை விட்டு துரத்த திட்டம் போடும் விஜயா..!

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்டில் ரோகிணி வந்ததும் பார்வதி என்கிட்ட கூட உண்மையை மறைச்சுட்டீயே. உன்னை ஆரம்பத்துல இருந்து எனக்கு தெரியும். ஆனால் இப்படி ஒரு வ்சிஹய்த்தை சொல்லாம விட்டுட்ட என கேட்கிறாள். அதற்கு ரோகிணி தப்புதான் ஆண்ட்டி. ஆனால் எதுக்காக பண்ணேன். மனோஜை கல்யாணம் பண்ணனும் சொல்லி தான். மத்தபடி யாரோட பணத்துக்காகவும் இதை பண்ணலை என சொல்கிறாள்.
உடனே பார்வதி சரி விடு. நீயும் என்ன பண்ணுவ என சொல்கிறாள். அதனை தொடர்ந்து ரோகிணி, வீட்ல என்னை ஆண்ட்டி அவ்வளவு கொடுமைப்படுத்துறாங்க. மனோஜ்கிட்ட கூட பேச விடலை. நீங்கதான் அத்தைக்கிட்ட பேசனும் என சொல்கிறாள். அப்போது திடீரென விஜயா அங்கு வரவும், ரோகிணி உள்ளே போய் ஒளிந்து கொள்கிறாள்.
விஜயா கடும் கோபத்துடன் உள்ள வந்து நீ ஒரு கேரளா சாமியார் சொன்னில. அவரை நான் பார்க்கனும். மனோஜையும், ரோகிணியையும் பிரிக்க போறேன் என்கிறாள். இதனை உள்ளே இருந்து கேட்கும் இனியா கடுமையாக அதிர்ச்சி அடைகிறாள். நான் ரோகிணியை பிரிச்சு, மனோஜுக்கு இன்னொரு பணக்கார பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ண போறேன் என அடுத்த இடியை இறக்குகிறாள். இதனைக்கேட்டு ஆடிப்போகிறாள் ரோகிணி. அதன்பின்னர் விஜயா போனதும் நீங்க எந்த சாமியாரை பார்க்க போறீங்களோ, அவர் யாருன்னு எனக்கும் சொல்லுங்க ஆண்ட்டி. இந்த பிரச்சனையை நானே சமாளிச்சுக்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறாள் ரோகிணி. இதனிடையில் வித்யாவை பார்க்க வரும் முருகன், நம்ம கல்யாணத்துக்காக புதியா பிளாட் ஓன்று வாங்க போறேன் என சொல்கிறான்.
நாளைக்கு நீங்களும் வரணும் என சொல்ல, நம்ம காதலுக்கு உதவி பண்ண ஒருத்தவங்களை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்கிறாள். அப்போது முருகன் எனக்கும் காதலுக்கு ஒருவர் ஐடியா கொடுத்தாரு. அவரை நானும் கூட்டிட்டு வர்றேன் என முத்துவை பற்றி சொல்கிறான்.
இதனிடையில் மீனா பூ கொடுக்க போகும் போது வீட்டை விற்பதாக சொல்லி மனோஜை ஏமாற்றிய ஆளை பார்க்கிறாள். அவளை துரத்தி கொண்டு போகும் போது மிஸ் பண்ணி விடுகிறாள். அவனிடம் தான் முருகன் புதிய பிளாட் வாங்குவது பற்றி பேசி இருக்கிறான். இதனால் முருகன் அவனிடம் ஏமாற போகிறானா? இல்லை அந்த பிராடை முத்து, மீனா பிடிக்க போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.