கென்னடி பட விவகாரம்- விக்ரம் மற்றும் அனுராக் காஷ்யப் இடையே மோதல்..!!

கென்னடி படத்தில் விக்ரம் நடிக்காமல் போனது குறித்து கேன்ஸ் திரைப்பட விழாவில் வருத்தம் தெரிவித்த இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு, நடிகர் விக்ரம் ட்விட்டர் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
 
vikram

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கென்னடி. இந்த படத்தின் திரையிடல் நிகழ்ச்சி கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற்றது.

அதற்கு பிறகு நேர்காணலில் பேசிய இயக்குநர் காஷ்யப், கென்னடி படத்தில் கதாநாயகனாக முன்பு நடிக்க இருந்தவர் விக்ரம். அவரை தொடர்புகொண்டு கதையை கூறுவதற்காக முயற்சித்த போது, விக்ரமிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் வேறொருவர் ஹீரோவாக நடிக்க வேண்டியதாயிற்று என்று கூறினார்.


இதற்கு ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ள நடிகர் விக்ரம், கடந்த ஓராண்டுக்கு பிறகு கென்னடி படத்தில் நடிப்பதற்காக என்னை தொடர்புகொள்ள முயற்சித்தீர்கள். ஆனால் நான் பதிலளிக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்பட்டதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். அதற்கு பிறகு உங்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு பேசிய போது, கென்னடி படத்துக்காக என்னை நீங்கள் தொடர்புகொள்ள முயற்சித்த மின்னஞ்சல் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றும் விளக்கம் அளித்துவிட்டேன். முன்பு நான் குறிப்பிட்டது போல, கென்னடி படத்தை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். அதற்கு காரணம் என் உண்மையான பெயரான ‘கென்னடி’ என்று படத்தின் தலைப்பு இருப்பதால் என்று விக்ரம் பதிவிட்டுள்ளார்.

From Around the web