மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் எப்போது தொடங்கும்?

 
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் எப்போது தொடங்கும்?

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படத்திற்கான பணிகளை விரைவிலேயே தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்ணன் படம் தயரிப்பில் இருந்தபோதே மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. கபடி விளையாட்டை மையப்படுத்திய படமாக இது உருவாகவுள்ளது. 

இதற்கிடையில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் துருவ் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிட்ப்பு தொடங்கவுள்ளது.

மேலும் இந்த படத்திற்கான விளையாட்டுப் பயிற்சியிலும் துருவ் விக்ரம் ஈடுபடவுள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான கதை எழுதும் பணி அனைத்தும் முடிந்துவிட்டதாக மாரி செல்வராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ப்டத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது. 

From Around the web