#BIG NEWS:- விஜய் சேதுபதியை எட்டி உதைத்த வாலிபர் யாரென்று தெரிந்தது..!

 
விஜய் சேதுபதியை விமான நிலையம்

பெங்களூரு விமானநிலையத்தில் எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைக்க முயன்ற கேரள வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் சேதுபதி கடந்த 04-ம் தேதி பெங்களூரு சென்றிருந்தார். பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்ற போது அவரை ஒரு வாலிபர் எட்டி உதைக்க முயன்றார்.

இதில் விஜய் சேதுபதியின் உதவியாளர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபரை பிடித்த விமான நிலைய காவல் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது.

நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், நான் மது அருந்தியதை கவனித்த விஜய் சேதுபதி போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய் சேதுபதியை தாக்க முயன்றதாக வாலிபர் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து எச்சரிக்கை செய்து விமான நிலைய அதிகாரிகள் வாலிபரை அனுப்பி வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி அந்த வாலிபரால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து கேரளாவில் வைத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளர்.
 

From Around the web