சம்பளத்தை ஒரேயடியாக ஏன் குறைத்தார் ரஷ்மிகா?

 
1

 குபேராவுக்காக ரஷ்மிகா வாங்கிய சம்பள விபரம் அறிந்த பிறகு ஏன், ஏன் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். குபேரா படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வாங்கியிருக்கிறார் ரஷ்மிகா மந்தன்னா. முன்னதாக சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க ரஷ்மிகாவுக்கு ரூ. 10 கோடி சம்பளம் கிடைத்தது.

புஷ்பா 2 படம் உலக அளவில் ரூ. 1, 800 கோடி வசூல் செய்தது. அப்படியொரு மாபெரும் வெற்றி படத்தில் நடித்த பிறகு தன் சம்பளத்தை குறைத்திருக்கிறார் ரஷ்மிகா. புஷ்பா 2 படத்தை அடுத்து ரஷ்மிகா நடிப்பில் வெளியான படம் சாவா. விக்கி கௌஷல் ஹீரோவாக நடித்த அந்த படம் சூப்பர் ஹிட்டானது. சாவா படத்தில் மாகாராணி யேசுபாயாக நடிக்க ரஷ்மிகா மந்தன்னாவுக்கு ரூ. 4 கோடி சம்பளம் கிடைத்தது. சாவா சம்பளம் அல்லு அர்ஜுன் பட சம்பளத்தில் பாதி கூட இல்லை.

சாவாவை அடுத்து வெளியான சிக்கந்தர் படத்திற்காக ரஷ்மிகாவுக்கு ரூ. 5 கோடி சம்பளம் கொடுத்தார்கள். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் படத்தில் ராஜா சஞ்சய் ராஜ்கோட்டின் மனைவி சாய்ஸ்ரீயாக நடித்திருந்தார்.

வழக்கமாக ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்றால் நடிகைகள் தங்களின் சம்பளத்தை உயர்த்துவார்கள். அப்படி இருக்கும்போது ரூ. 1, 800 கோடி வசூல் செய்த படத்திற்கு பிறகு தன் சம்பளத்தை பாதிக்கும் குறைவாக ஏன் குறைத்தார் ரஷ்மிகா என்பதே பலரின் கேள்வி ஆகும்.

ரஷ்மிகா ஒரு படத்தில் நடித்தால் அது வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. ராசியான ஹீரோயின் என பெயர் எடுத்த நிலையில் அவர் தன் சம்பளத்தை ஒரேயடியாக குறைத்ததன் காரணம் என்னவாக இருக்கும் என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.ரஷ்மிகா தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

From Around the web