எதுக்காக அம்மாகிட்ட போய் பேசுனீங்க..? அருணுக்காக முத்துவிடம் சண்டை போடும் மீனா..! 

 
1

 இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கடையில் இருக்கும் போது, அவனுடைய பிரெண்ட் பேசி கொண்டு இருக்கிறான்.அப்போது ரோகிணி ஆர்டர் பண்ண சாப்பாடு அவனுக்கு வருகிறது.இதனை பார்த்தும் அவனுடைய பிரெண்ட் பார்த்தியா உன்மேல எவ்வளவு பாசமா சாப்பாடு எல்லாம் ஆர்டர் பண்ணி கொடுத்து இருக்காங்க. நீ என்னையா இப்படி பண்ணிட்டு இருக்க. அவுங்ககிட்ட பேசு என அட்வைஸ் பண்ணுகிறான். அதற்கு மனோஜ், என் அம்மாவை மீறி எதுவும் பண்ண முடியாது என சொல்கிறான். உடனே அவனுடைய பிரெண்ட் இப்படித்தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தனுக்கும், அவன் மனைவிக்கும் அடிக்கடி பிரச்சனை.

அவனோட மனைவி இவனை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணாங்க. இவன் உன்னை மாதிரி சீன் போட்டான். கடைசியா அந்த பொண்ணு வேற ஒருத்தனை கூட்டிட்டு போய்ட்டாங்க என சொல்கிறான். இதனைக்கேட்டு கடுமையாக ஷாக் ஆகிறான் மனோஜ். இதனிடையில் முத்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் மீனா எதுக்காக அம்மாக்கிட்ட போய் பேசுனீங்க என கேட்கிறாள். அதற்கு அவன், என்னமோ நான் உங்க வீட்டு மூத்த பையன் சொல்லுவ.

இப்போ என்னோட உன் வீடுன்னு சொல்ற. எனக்கு அப்போ அந்த வீட்ல சம்பந்தம் இல்லையா என கேட்கிறான். அதற்கு மீனா நம்ம பேசி முடிவு பண்ணிட்டு அம்மாட்ட பேசிருக்கலாம் என கேட்கிறாள். அதற்கு அவன் இனி பேச எதுவும் இல்லை. சீதாவுக்கு ரெண்டு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் என சொல்லி போட்டோவை கொடுக்கிறான். உடனே மீனா அவளுக்கு அருணை தான் பிடிச்சு இருக்கு. உங்களோட அவருக்கு பிரச்சனை இருக்கலாம்.

நீங்களும் தப்பு பண்ணி இருக்கீங்கள்ள என அருணுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறாள். இதனால் டென்ஷனாகும் அவன் மீனாவை அடிக்க கை ஓங்குகிறான். இந்த விஷயத்துல இனிமேல் பேசுறதுக்கு எதுவும் இல்லை. அருணை தான் கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னா, நான் எதுலயும் தலையிட மாட்டேன். அதோட நீயும் அங்க போகக்கூடாது என தீர்க்கமாக தனது முடிவை சொல்லிவிட்டு, மீனாவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பி விடுகிறான்.

இதனால் மீனாவும் அவனிடம் எப்படி பேசுவது என புரியாமல் அதிர்ச்சி அடைகிறாள். இதனிடையில் மனோஜ் ரூமிற்கு வரும் போது அங்கு லெட்டர் ஒன்று இருக்கிறது. அதில் 'மனோஜ் என்னை தேடாத. நான் போறேன்' என எழுதி இருக்கிறது. அதை பார்த்து அதிர்ச்சியடையும் அவன், தனது பிரெண்ட் சொன்னதை போன்று எங்கயும் போய் விட்டாலோ என நினைத்து குழம்புகிறான். அப்போது ரோகிணி ரெஸ்ட் ரூமில் இருந்து வருகிறாள். இதனால் நிம்மதியடையும் மனோஜ், என்ன லெட்டர் இது என கேட்கிறான்.

ஒரு கிளையன்ட் வீட்டுக்கு போக வேண்டியது இருந்தது. நீ இங்க இல்லை. அதான் எழுதி வைச்சீட்டு போகலாம் நினைச்சேன் என்கிறாள். அதன்பின்னர் அவனிடம் மதியம் உனக்காக சாப்பாடு ஆர்டர் பண்ணேன். நீ என்னை சாப்பிட்டியான்னு கூட கேக்கலை. நீ இப்படியே இருந்தால் நான் ஏதாவது முடிவு பண்ண வேண்டியது வந்துடும் என சொல்கிறாள் ரோகிணி.

இதனால் அதிர்ச்சி அடைகிறான் மனோஜ். இதனையடுத்து ராத்திரி முத்து, மனோஜ், ரவி மூவரும் அவர்களோட மனைவியை நினைத்து சரக்கடித்து புலம்புகின்றனர். இதனையடுத்து இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.

From Around the web