மீண்டும் சிக்கலில் யூடியூபர் இர்பான் - உரிய நடவடிக்கை எடுங்க... ஜவாஹிருல்லா வலியுறுத்தல்..! 
 

 
1
யூடியூபர் இர்பான் சமீபத்தில் தனது மனைவியை துபாய்க்கு அழைத்துச்சென்று அங்கு தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்து அறிந்து அதனை விடியோவாகவும் வெளியிட்டிருந்தார். இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது. இர்பான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே யூடியூபர் இர்பான் மீதான புகார் குறித்து பொது சுகாதாரத்துறை சார்பில் விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ குழுவிடம் வாட்ஸ்அப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையிலேயே "தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்ஃபானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்!” தன் மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, அதை ஒரு விழாவாக நடத்தி வீடியோ வெளியிட்டதற்கு யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.

1

From Around the web