நாட்டு வெடிகுண்டு தயாரித்த  திமுக பிரமுகரின் தம்பி படுகாயம்..!!

 
1

திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகவும் 1வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருபவர் நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்து உள்ள ரோஸ்மியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன். இவருக்கு இசக்கிமுத்து என்கிற தம்பி உள்ளார்.

இவர், அப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவது வழக்கம். அதற்காக, வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. 

இதில் இசக்கிமுத்துவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இசக்கிமுத்து துடிதுடித்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Bomb

மேலும் அவரது வீட்டில் வெடிக்காத குண்டுகள் வீட்டின் உள்ளே இருப்பதால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை நடத்த இருகின்றனர்.

From Around the web